யேர்மனியில் வெளிவிவகார அமைச்சுக்கு முன்னால் நடைபெற்ற நிலமீட்பு போராட்டத்திற்கு ஆதரவான அடையாள கவனயீர்ப்பு நிகழ்வு

305 0

தாயகத்தில் நடைபெறும் மக்களின் நிலமீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக இன்றைய தினம் யேர்மனியில் பேர்லின் நகரில் வெளிவிவகார அமைச்சுக்கு முன்னால் அடையாள ஆதரவு கவனயீர்ப்பும் மனுகையளிப்பும் நடைபெற்றது.தமிழர் நிலத்தை அபகரித்து , தமிழர் வாழ்வுரிமையை மறுதலித்து ,தமிழீழ தேசத்தை அழிக்கும் வகையில் சிங்கள பேரினவாத அரசு முன்னெடுக்கும் கடடமைப்புசார் இனவழிப்பை எடுத்துரைக்கும் முகமாக நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் பதாதைகளை தங்கியவண்ணம் மழை குளிரை பாராது நீதி வேண்டி அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்வின் இறுதியில் வெளிவிவகார அமைச்சிடம் மனு கையளிக்கப்பட்டது. கடந்த 3 வாரங்களுக்கு முன்னதாக வெளிவிவகார அமைச்சில் இலங்கைக்கான உயரதிகாரியுடன் நேரடி சந்திப்பும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.