புதுக்குடியிருப்பு மற்றும் பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பாடசாலை மாணவர்கள் இன்று போராட்டத்தில்…..(காணொளி)

339 0

 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மற்றும் பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பாடசாலை மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி, புதுக்குடியிருப்பு சிறி சுப்பிரமணிய வித்தியாசாலை, புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவர்கள் இணைந்து மாணவ சங்கிலி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தொடர்ச்சியாக தீர்வின்றி போராடிவரும் புதுக்குடியிருப்பு மற்றும் பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவு வழங்கும் முகமாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாக இருந்து, புதுக்குடியிருப்பு சந்திவரை இந்த சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.