அராஜக கூட்டத்திடமிருந்து காப்பாற்றுவேன் – தீபா

237 0

தமிழக மக்களையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினையும் அராஜக கூட்டத்திடம் இருந்து காப்பாற்றுவதே தன் ஒரே லட்சியம் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்தார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தன்னை சந்திக்க வந்த ஆதரவாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் இப்போது மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது.

இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஜெயலலிதா வழியில் மீண்டும் நல்லாட்சி மலரும் நம்பிக்கையில் தனது பணியினை தொடர்ந்து செய்வோம்.

தமிழக மக்களையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினையும் அராஜக கூட்டத்திடம் இருந்து காப்பாற்றுவது தான் எனது ஒரே லட்சியம்.

அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.

என்னை நம்பி வந்தவர்களை காப்பாற்றுவேன்.

ஜெ., வழியில் நடப்பேன். உங்களுக்காக நான் இருக்கிறேன் எனவும் தீபா குறிப்பிட்டார்.