மொசூலில் இராணுவ படையினர் முன்னேற்றம்

296 0

ஈராக்கிய நகரான மொசூலில் இடம்பெற்றுவரும் ஐ எஸ் அமைப்பின் மீதான தாக்குதல்களில் இராணுவ படையினர் முன்னேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய மொசுலில் ஐ எஸ் வசமிருந்த பல கிராமங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய இராணுவ நடவடிக்கையின் போது மொசூலின் முக்கிய பகுதிகளை இராணுவம் அண்மித்துள்ள நிலையில் மனித உரிமை அமைப்புக்கள் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து குரல் எழுப்பி வருகின்றன.