யாழ். மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக 207 முறைப்பாடுகள்

267 0

யாழ். மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக அதிகளவான முறைபாடுகள் தொலைபேசியின் ஊடாகவே கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த தகவலை யாழ் மாவட்ட சிறுவர் விவகார பிரிவு வட்டாரங்கள் கூறியுள்ளன. தொடர்ந்தும் அந்த வட்டாரம் தெரிவிக்கையில்,

கடந்த வருடம் ஜனவரி தொடக்கம் ஒக்டோபர் வரை யாழ்ப்பாணத்தில் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக 207 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.அவ்வாறான 26 முறைபாடுகள் 1929 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாகவும், 73 முறைபாடுகள் வேறு அலுவலக தொலைபேசி இலக்கத்தினூடாகவும் கிடைக்கப்பெற்றுள்ளன.இவற்றுள் பாடசாலைக்கு செல்லாத மாணவர்களுக்கு எதிராக 32 முறைப்பாடுகளும், சிறுவயது திருமணம் தொடர்பாக 12 முறைப்பாடுகளும், 3 உடலியல் ரீதியான துஸ்பிரயோக முறைப்பாடுகள் ,

4 உளவியல் ரீதியான துஸ்பிரயோகம், 7 பாலியல் துஸ்பிரயோகம், 9 சிறுவர் அலட்சியம் தொடர்பான முறைப்பாடு,4 குழந்தை தொழிலாளர்கள் தொடர்பாக முறைப்பாடுகள்,2 வேறு விதமான முறைப்பாடுகள் என மொத்தமாக 73 முறைப்பாடுகள் தொலைபேசிகளினூடாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.மேலும், சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவது தொடர்பில் அறிந்தால் 1929 எனும் தொலைபேசி ஊடாக அறியத்தரலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.