புலிகளின் ஆட்லறி செல்கள் மீட்பு

253 0
முல்லைத்தீவு அம்பகாமம் காட்டுக்குள் இருந்து இன்று  புலிகள் பயன்படுத்திய ஆட்லறி செல்கள் மீட்கப்பட்டுள்ளன.
விமானப்படையினரால் குறித்த ஆட்லறி செல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு குண்டு செயலிழக்கும் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக விமானப்படையினா் தெரிவித்துள்ளனா்.
ஒவ்வொரு   எறிகனையும்  16 கிலோ கிராம் கொண்டது என்றும் விமானப்படையினா் தெரிவித்துள்ளனா்.
குறித்த அம்பகாமம் காட்டுப்பகுதிக்கு அருகில்தான் 2009 முன் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய
 விமானப் படைத்தளம் காணப்படுகிறது.
தற்போது அது சிறிலங்கா விமானப்படையினரின் பயன்பாட்டில் உள்ளது.