மின்சார சபையின் மின் கட்டண சிட்டைகள் வீதிகளில்……… (காணொளி)

285 0

கிளிநொச்சியில், மின்சார சபையின் மின் கட்டண சிட்டைகள் வீதிகளில் சிதறிக்கிடக்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் பல கிராமங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மின் கட்டணத்திற்கான சிட்டைகள் வழங்கப்பட்டவில்லை.

ஆனால் பல கிராமங்களுக்குரிய நூற்றுக்கணக்கான மின் கட்டண சிட்டைகள் வீதிகளில் சிதறிக்கிடக்கின்றன.

கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் பொறிக்கடவை சந்தி தொடக்கம் குடமுறுட்டி பாலம் வரையான பகுதிகளில் இவ்வாறு கிளிநொச்சி மின்சார சபையின் மின் கட்டண சிட்டைகள் வீதிகளில் எறியப்பட்டுள்ளது.

குறித்த மின் கட்டண சிட்டைகள் கடந்த வருடம் நவம்பர் மாத்திற்குரியவை ஆகும். கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம், முரசுமோட்டை, ஊரியான், புன்ணைநீராவி, மயில்வானகபுரம், போன்ற கிராமங்களுக்குரிய மின் கட்டண சிட்டைகளே இவ்வாறு வீதியில் எறிப்பட்டுள்ளது.

மின்சார சபையின் உத்தியோகபூர்வ பாவனையாளர்களுக்கு வழங்கப்படுகின்ற மின்சார சிட்டைகள், இவ்வாறு வீதியில் எறியப்பட்டுள்ளன.

இதேவேளை பிரதேச மக்கள் சிலரிடம் கடந்த நவம்பர் மாத மின் கட்டண சிட்டைகள் கிடைத்துள்ளதா என வினவிய போது, இதுவரை தங்களுக்கு மின் கட்டண சிட்டைகள் கிடைக்கவில்லை என பதிலளித்தனர்.

அத்துடன் பல மாதங்களுக்குரிய மின்சார கொடுப்பனவுகளை ஒரு சிட்டையில் சேர்த்து வழங்குவது நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது எனவும் மக்கள் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய மின்சார சபை அலுவலகத்துடன் தொடர்புகொண்டு வினவிய போது, மின் கட்டணத்திற்கான சிட்டைகள் வீதியில் எறியப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராய்ந்து வருவதாக பதிலளித்தனர்.