கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் காணியில் இன்று தனியார் ஒருவரால் வேலி…(காணொளி)

281 0

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் காணியில் இன்று தனியார் ஒருவரால் வேலி அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த மாவீரர் துயிலுமில்லம் காணியின் ஒரு பகுதி தனக்குச் சொந்தமானது எனத் தெரிவித்து தனிநபர் ஒருவர், கூலியாட்களை கொண்டு கம்பி கட்டைகள் போட்டப்பட்டு வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கரைச்சி பிரதேச செயலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச்சென்ற பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அமைக்கப்பட்ட வேலிகளை பிடுங்கி எடுத்ததோடு, வேலி அமைக்கும் பணியையும் நிறுத்தியுள்ளனர்.