மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்(காணொளி)

307 0

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று மட்டக்களப்பில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை மூடக்கோரியும், இலவச கல்வியை பாதுகாக்க கோரியும், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்தில் இருந்து மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.

கவனஈர்ப்பு பேரணியானது மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியுடாக மட்டக்களப்பு நகரினை அடைந்து, கோவிந்தன் வீதியூடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினை அடைந்தது. பின்னர் வாவிக்கரையூடாக பல்கலைக்கழகத்தை சென்றடைந்தது.

இதன்போது மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை மூடக்கோரியும் இலவச கல்வியை பாதுகாக்ககோரியும் காந்திபூங்கா முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மாணவர்களினால் நடாத்தப்பட்டது.

கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் தமது எதிர்ப்பினை காட்டும் வகையில் மாறுவேடங்களையும் அணிந்திருந்ததுடன் எதிர்ப்பு சுலோகங்கள் கொண்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.