கேப்பாப்புலவு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பில் ஆர்ப்பாட்டம்

228 0

கேப்பாப்புலவு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பில் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

புதுக்குடியிருப்பு போராட்டம் நேற்று முன்தினம் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தநிலையில், குறித்த இடத்திற்கு இன்று சென்ற வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட 49 பேருக்கு சொந்தமான, 19 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து இம்மாதம் மூன்றாம் திகதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.