சுதந்திர தினத்தில் சட்ட விரோதமான முறையில் மதுபானம் விற்றவர் கைது

259 0

யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண காவற்துறையினருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது நேற்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் மதுபான சாலைகள் முடப்பட்டிருந்தன.

இதனை பொருட்படுத்தாது மதுபான விற்பனையில் ஈடுப்பட்டவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், குறித்த விடுதிக்கு எதிராக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வுள்ளதாகவும் யாழ்ப்பாண காவற்துறையினர் தெரிவித்தனர்.