இலங்கையின் சுதந்திர தினம், தமிழ் தேசிய மக்களின் துக்கதினம் என்ற தொனியின் யாழ்ப்பாணத்தில்  ஆர்ப்பாட்ட பேரணி(காணொளி)

280 0

இலங்கையின் சுதந்திர தினம், தமிழ் தேசிய மக்களின் துக்கதினம் என்ற தொனியின் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்னால் பொலிஸாரின் தடையையும் மீறி குறித்த பேரணி இடம்பெற்றது.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில், ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிராக இந்த போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், கடத்தப்பட்டவர்கள் எங்கே, இனப்படுகொலை போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.