கிளிநொச்சி தர்மபுரம், கல்லாறு, பிரமந்தனாறு ஆகிய பகுதிகளில், அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய ஏழு உழவு இயந்திரங்களையும், சாரதிகளையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப்பொலிஸ்மா அதிபரின் உத்தரவிற்கு அமைவாக, கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட போதைப்பொருள் குற்றத்தடுப்பு விசேட பொலிசார், சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றனர்.
இதன் போது அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய ஏழு உழவு இயந்திரங்களையும், அதன் சாரதிகளையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கிளிநொச்சி தருமபுரம், கல்லாறு, பிரமந்தனாறு ஆகிய பகுதிகளில் மணல் ஏற்றிய உழவு இந்திரங்களுடன் கைதுசெய்யப்பட்டவர்கள் நாளையதினம் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.