கிளிநொச்சி கண்ணகைபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, சிறுவர் பூங்கா திறப்பு விழா(காணொளி)

284 0

கிளிநொச்சி கண்ணகைபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, சிறுவர் பூங்கா திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

அத்துடன் கிளிநொச்சி கண்ணகைபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில், தரம் ஐந்;து புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மற்றும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று நடைபெற்றது.

வடக்கு மாகாண கல்வியமைச்சின் கீழ், மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் சிறுவர் பூங்கா நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வித்தியாலய அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கலந்துகொண்டார்.

அத்துடன் சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர் க.முருகவேல் கலந்துகொண்டார்.

இதன்போது புலமைப்பிரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மற்றும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களும், இப்பாடசாலையில் கல்வி கற்று, உயர் கல்வியை அக்கராயன் மகா வித்தியாலயத்தில் கற்று, பல்கலைக்கழகத்;திற்கு தெரிவான மாணவிகளும் கௌரவிக்கப்பட்டனர்.