அரசடிப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின்மீது இனந்தெரியாதவர்கள் நடாத்திய தாக்குதல், வெளியாகியது cctv காணொளி

523 0

 

யாழ்ப்பாணம் அரசடிப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின்மீது இனந்தெரியாதவர்கள் நடாத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதுடன், வர்த்தக நிலையமும் சேதத்திற்குள்ளாகியுள்ளது,  அ த்துடன்  வெளியாகியது cctv காணொளி

யாழ்ப்பாணம் அரசடிப்பகுதியில் நேற்று இரவு 07.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், தாக்குதலுக்குள்ளான வர்த்தக நிலையத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவர் காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்குபேர் குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், சம்பவத்தில் குறித்த வர்த்தக நிலையம் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.