தடுப்பு கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் புதிய சட்டவரைபுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு இந்த வரைபு தயாரிக்கப்பட்டபோதும் எதிர்ப்புக்கள் காரணமாக அது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை.
இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத்தினதும் சட்டமா அதிபர் திணைக்களத்தினதும் பிரதிநிதிகளைக்கொண்டு புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.