தமிழராட்சி மாநாட்டின்போது கொல்லப்பட்ட மக்களின் நினைவுதினம் (காணொளி)

255 0

jaffna-ninaivukuralயாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழராட்சி மாநாட்டின்போது கொல்லப்பட்ட மக்களின் நினைவுதினம் நேற்று நினைவுகூரப்பட்டது.

1974ஆம் ஆண்டு இதே தினத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழராட்சி மாநாட்டின்போது கொல்லப்பட்ட 9 மக்களின் 43ஆவது நினைவுதினம் நினைவுத்தூபியில் நினைவுகூரப்பட்டது.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நினைவுதின நிகழ்வுகள் இடம்பெற்றன.நினைவுத்தூபிக்கு முன்பாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவு தூபிகளுக்கு மலர்மாலை அணிவித்து நினைவுகூரல் நடைபெற்றது.

நினைவுகூரல் நிகழ்வில் வடக்கு மாகாணசபையின் பதில் முதலமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் இவ்வாறு உரையாற்றினார்.