கிளிநொச்சியில் கடும் பனி காரணமாக விவசாய வயல் நிலங்கள் பூச்சி தாக்கங்களினால் பாதிக்கப்படுகிறது என விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.
கிளிநொச்சி நகர் பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முற்றிலும் பனியினால் மூடியுள்ளது.
அதிகாலை முதல் சுமார் 11 மணிவரையும் கடும் குளிருடன் கூடிய பனி பொழிவு மிக அதிகமாக காணப்படுகின்றது.
இதன் காரணமாக மக்களின் இயல்வு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
பனிபொழிவு காரணத்தால் விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் கிருமிகளின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
பருவமழை பெய்துவரும் பட்சத்தில் விவசாய நிலங்கள் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் அனைத்தும் கருகிவிடும் நிலைக்கு போய்விடும் என்று விவசாயிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.