நீதி மறுக்கப்பட்டிருக்கின்றன – ஜெனீவா உடன்படிக்கை அமுல்ப்படுத்த வேண்டும்

252 0

unnamedதமக்குரிய நீதி மறுக்கப்பட்டிருக்கின்றன, ஜெனீவா உடன்படிக்கையை அரசு இழுத்தடிப்புக்கள் செய்யாமல், இனிமேலும் காலதாமதங்களை மேற்கொள்ளாமல், உடனடியாக அமுல்ப்படுத்த வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்நிறுத்தித்தான் நாம் மனித உரிமை தினதில் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றோம்.

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒன்றியம் இணையத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தெரவித்தார்.

மனித உரிமை தினமான டிசம்பர் 10 சனிக்கிழமையன்று மட்டக்களப்பில் மாபெரும் பேரணி ஒன்று நடைபெற்றது.

மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், தன்னார்வ தொண்டர் அமைப்புக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், காணாமல் போனவர்களின் உறவினர்கள், என பலர் இதன்போது இனைந்திருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி இன்றும் எட்டாக்கனியாகவே இருக்கின்றன.

காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டிய சட்ட மூலம் சிவில் அமைப்புக்களிடமும் ஆலோசனைகளைப் பெற்று ஆக்கப்படுவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தன.

ஆனால் அவை நடைபெறாமல் எவ்வாறாயினும், நாடாளுமன்றத்தில் அது சட்டமாக்கப்பட்டுள்ளது.

இதற்கான அலுவலகம் கொழும்பில் அமையவுள்ளதாக எமக்கு தகவல்கள் வந்த வண்ணமுள்ளன.

இந்த சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு மாவட்ட ரீதியாக பிரதேச ரீதியாக காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகங்கள் திறக்கப்பட வேண்டும்.

அப்போதுதான் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்குரிய உரிமைகளைப் பெறுவதற்கு உறுதுணையாக அமையும்.

நிலைமாறு கால நீதியுடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பிடு வழங்குதல் போன்ற விடையங்கள் இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கின்றன.

இதனை அரசாங்கம் மிகவிரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

சிறுபான்மை மக்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கான சில சதிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

கடந்த வருடம் நடைபெற்ற மனித உரிமை நாளில் 1000 அஞ்சல் அட்டைகளை ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தோம், அதற்கு இன்றுவரை எதுவித பதில்களும் இல்லை, அந்த சட்டமும் எடுக்கவில்லை.

எனவே அந்த நாட்டில் மனித உரிமைகள் நிலைநாட்ட வேண்டுமாக இருந்தால் இவை போன்ற சட்டங்கள் வருவதை நாங்கள் வன்மையாக எதிர்க்கின்றோம்.

எனவே இருக்கின்ற சட்டங்களுக்கு ஊடாக சட்டம் ஒழுங்கு, நாட்டின் இறையாண்மை, தேசியம், உள்ளிட்ட அனைத்தையும் பாதுகாக்க முடியும் என்பதை நாம் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.