மட்டக்களப்பு, வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதான வீதி மத்திய கல்லூரி சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயதுடைய பாடசாலை மாணவன் படுகாயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று பகல் 1 மணியவில் இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சைக்கிளில் சென்ற இந்தச் சிறுவன் பிரதான வீதியைக் கடக்க முற்பட்டபோது பட்டா ரக லொறி சிறுவன் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இதில் படுகாயமடைந்த சிறுவன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.