யுத்ததின் பின் மதுபானசாலைகள் அதிகரிப்பு – யோகேஸ்வரன்

278 0

liqயுத்தத்தின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானசலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

அடுத்த ஆண்டுக்காக வாரவு செலவு திட்டத்தின் மூன்றாம் குழுநிலை விவாத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.

யுத்தம் முடியும் போது 48 மதுபானசாலைகள் காணப்பட்டன.

எனினும் 11 புதிய மதுபானசாலை திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.