மாணவர்களின் படுகொலைக்கு நீதி கோரி யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வு

384 0

மாணவர்களின் படுகொலைக்கு பன்னாட்டு அரங்கில் நீதி கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை யேர்மன் தலைநகர் பேர்லினில் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.சிங்கள பேரினவாத அரசின் ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலை எண்ணத்தையே மாணவர்களின் மீதான படுகொலை சுட்டிக்காட்டுகின்றது .கொலையினை மேற்கொண்டு அதனை மூடிமறைக்க நினைத்த இலங்கை அரசிடமிருந்தே இதற்கான நீதியினை எதிர்பார்க்க முடியாதென்பதால் இப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நாம் வலியுறுத்தி நிற்கின்றோம்.
student-protest-in-berlin

இக் கவனயீர்ப்பில் பேர்லின் வாழ் அனைத்து தமிழ் உறவுகளும் குறிப்பாக உயர்கல்வி மாணவர் சமூகமும் அணி திரண்டு இணைந்து; நீதியை வேண்டி போராட வருமாறு தமிழ் இளையோர் அமைப்பு ஆகிய நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி
பேர்லின் தொடர்பு : கஜன் 0176-26922123