யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதிவேண்டி சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்துக்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்திற்கு முன்னால் ஒன்றுகூடிய மாணவர்கள் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தன நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.