வவுனியாவிலும் இன்று ஹர்த்தால் அனுஸ்டிப்பு(காணொளி)

351 0

sequence-02-still030வடக்கு மாகாணத்தில் இன்று அனுஸ்டிக்கப்பட்டு வரும் ஹர்த்தாலினால் வவுனியா மாவட்டமும் வெறிச்சோடிக்காணப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் பொலிசாரினால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி கோரி வவுனியாவில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராசா கஜன் ஆகியோர் பொலிசாரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்தும், உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கோரியும் இன்று வவுனியாவில் முழு கடையடைப்பு நடைபெறுகிறது.