யாழ் பல்கலை மாணவர் கொலை-கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் (காணொளி)

401 0

colomboயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை பொலிஸார் படுகொலை செய்ததாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்து கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்;று முன்னெடுக்கப்பட்டது.

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்று மாலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

‘ஜனநாயகத்துக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள்’ அமைப்பு ஒழுங்குபடுத்தியுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையைக் கண்டிப்போம், கஜன், சுலக்சனை கொலை செய்தது யார்? நல்லாட்சியில் சட்டமும் ஒழுங்கும் எங்கே? போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களால் தாங்கப்பட்டிருந்தது.