யாழில் வாள்வெட்டுக்குள்ளான இரு பொலிஸாரும் கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றம்

310 0

4யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் வாள்வெட்டில் காயமடைந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு பொலிசாரும் கண்டி போதனா வைத்தியசாலைக்கு நேற்றிரவு மாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த 23ஆம் திகதி சுன்னாக நகரின் வர்த்த நிலையத்திற்கு முன்னால் சிவில் உடையில் கடமையிலிருந்த நவரத்தின பண்டார, கேரத் ஆகிய இருவருமே கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்த இரு பொலிசாரும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதன் அடிப்படையில் பொலிசாரின் விருப்பத்திற்கு ஏற்ப கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நவரத்தின பண்டார வலது கையில் வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் எலும்பு பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் மூலம் அறியமுடிகின்றது. கேரத் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் தலையில் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.