பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு-சம்பவ இடத்தை தடயவியலாளர்கள் ஆய்வு செய்தனர்(காணொளி)

500 0

analysயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தை கொழும்பிலிருந்து வருகை தந்த தடயவியலாளர் குழுவினர் ஆராய்ந்துள்ளனர்.

இக்குமுவினர் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு வருகைதந்து பார்வையிட்டுள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி நள்ளிரவு 12 மணியளவில் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணத்திலிருந்து கந்தரோடையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது பொலிசாரின் துப்பாக்கிச் சூடு காரணமாக இரு பல்கலைக்கழக மாணவர்கள் பலியாகியுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 5 பொலிசார் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.