ராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரிக்கப்பட்டது

316 0

Law and justice concept

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் வழக்கு விசாரணை இடம்பெற்றது.

கடந்த வழக்கு விசாரணையின் போதுஇ 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சாணக்கிய குணவர்தனவினால் இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் தொடர்பான அறிக்கை ஒன்று சமர்பிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தினால் பல வருடங்களுக்கு முன்னர் தயாரி்க்கப்பட்டவொன்று எனவும்இ அந்த அறிக்கை 2009 ஆம் ஆண்டு மே மாதம் சரணடைந்தவர்களின் பட்டியல் அல்லவெனவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

அத்துடன்இ தங்களிடம் வேறு சாட்சியங்கள் இல்லை எனவும்இ அதனால் வழக்கை நிறைவு செய்ய வேண்டும் என்றும் இராணுவம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

அதனை அடுத்துஇ இந்த விடயத்தை எழுத்து மூலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட 11 பேரினால் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.