தமிழக கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் – கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

245 0

gkvasanpressmeetதமிழக கடற்றொழிலாளர்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

கச்சத்தீவுக்கு அருகில் வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் ஜீ.கே.வாசன் கண்டித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக கடற்றொழிலாளர்கள், கச்சத்தீவுக்கு அருகில் வைத்து தாக்கப்பட்டதாக முறையிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இந்திய மத்திய அரசாங்கமும், தமிழக அரசாங்கமும் இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜீ கோ வாசன் கோரியுள்ளார்