யாழ் தெல்லிப்பளையில் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்பு(காணொளி)

360 0

jaffna-boms

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குரும்பசிட்டி பகுதியில் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
தெல்லிப்பளை –குரும்ப சிட்டி வீதியிலுள்ள காணி உரிமையாளர் ஒருவர் தனது காணியிலுள்ள கிணற்றினை நேற்று முன்தினம் துப்பரவு செய்துகொண்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்துள்ளார்

 

உடனடியாக தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதனை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் கிணற்றிலுள்ள சந்தேகத்திற்கிடமான பொருட்களை மீட்கும்போது அங்கு வெடிக்காத நிலையிலுள்ள குண்டுகள் மீட்கப்பட்டன.

 

மீண்டும் நேற்றுக்காலை விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு மீண்டும் மீட்புப்பணி ஆரம்பிக்கப்பட்டபோதும் கிணற்றிலிருந்து நீரூற்று பெருகியதன் காரணமாக மீட்புப்பணிகளில் தாமதம் ஏற்பட்டது.
எனினும் மாலை நான்கு மணியளவில் மீட்புப்பணிகள் முழுமையாக றிறைவுபெற்றன.
குறித்த மீட்புப் பணியின் போது ரவைகள் 1600 ,ஆர்.பி.ஜி செல்கள் 53 ,106 எம்.எம் ஆர்.ரி வகை செல்கள் 2, 40 எம்.எம் டொங்கான் 79 ,81 மோட்டார் செல்கள்- 7, 60 எம்.எம் மோட்டார் செல்கள்- 29 ,மோட்டார் பரா -7 மற்றும் புறொப்பளர்களும் அதற்குரிய பியூஜ்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன
இவ் ஆயுதங்களை மீட்கும் பணிகளை தெல்லிப்பளை பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.