கிளிநொச்சியில் கிபிர்க்குண்டு மீட்பு(காணொளி)

395 0

kilinochchi

கிளிநொச்சி–சுண்டிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து நேற்று சனிக்கிழமை, கிபிர்க் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது
.நேற்றயதினம் காலையில் குறித்த பகுதிக்கு விறகு வெட்டுவதற்குச் சென்றவர்கள் தர்மபுரம் பொலிசாரிற்கு வழங்கிய தகவலினை அடுத்து நேற்றைய தினமே தர்மபுரம் பொலிசாரால் நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு , சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் மற்றும் தர்மபுரம் பொலிசார் அடங்கிய குழுவினர் , குண்டை மீட்டுள்ளனர்.

 

இவ்வாறு மீட்கப்பட்ட குண்டு, 6 அடி நீளமும் 300 கிலோ கிராம் எடை கொண்டதுமாகும் என விசேட அதிரடிப்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும் குறித்த குண்டு வெடிக்காத நிலையில் செயலிழந்துள்ளதாகவும் இதனை முற்றிலும் செயலிழக்கச் செய்யும் நோக்கில் அதிரடிப்படையினர் அதனை மீட்டுச் சென்றுள்ளதாகவும் தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.