அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்கிறது

274 0

f339fba45aee901e4986bca3ccec776aஉண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகள் நல்ல நிலையிலேயே இருப்பதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை முதல் அவர்கள் இந்தப் போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள தங்களது வழக்குகளை விரைவில் நடத்துமாறு கோரியே, குறித்த கைதிகள் இவ்வாறு உண்ணாவிரதத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கமைய இருபது பேர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் குறித்த 20 பேரும் வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இதன்படி அவர்களின் நிலைமைய கவலைக்கிடமாக இல்லை என தெரியவந்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.