யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் பாரிய தீ விபத்துச் சம்பவம்

347 0

14304753ds_7825fவவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாக யாழ் பல்லைக்கழகத்தில் நேற்று 24.09.2016 மதியம் 1.30மணியளவில் ஏற்பட்ட தீ பரம்பல் ஏற்ப்பட்டுள்ளது.இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வளாக யாழ் பல்கலைக்கழகத்தில் தீடிரேன தீப்பரவல் ஏற்ப்பட்டுள்ளது. இதனை கண்ணுற்ற அயலவர் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்தமையைடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்புபடையினருடன் பொலிஸாரும் இணைந்து தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இது தொடர்பில் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் சென்ற குழுவினர் மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா வளாக யாழ் பல்கலைக்கழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் இதுபோன்ற தீ பரம்பல் இடம்பெற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.