முல்லைத்தீவில் பெருந்தொகையான கஞ்சா மீட்பு

356 0

kanjavu-865fewமுல்லைத்தீவு அம்பலவன்பொக்கணைப் பகுதியில் நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை 77கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.கடற்படையினர் வழங்கிய தகவலையடுத்து, விசேட காவல்துறையினரால் குறித்த கஞ்சாப் பொதி கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கஞ்சாப் பொதிகளைக் கொண்டுசெல்வதற்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியொன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் முச்சக்கரவண்டியையும் கைவிட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளனர். இதனையடுத்து முல்லைத்தீவு காவல்துறையினர் மேலதிக விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.