கிளிநொச்சியில் துப்பாக்கிகள், ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன-இருவர் கைது

364 0

625-500-560-350-160-300-053-800-900-160-90கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள கண்டாவளை மற்றும் புளியம்பொக்கனை ஆகிய கிராமங்களுக்கு இடைப்பட்ட காட்டு பகுதியில், சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சம்பம் தொடர்பில் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.