பாரிய மோசடிகள் தொடர்பான 9 விசாரணைகள் நிறைவு

299 0

pVK1w2g9 பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி விசாரணைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த விசாரணைகள் தொடர்பான அறிக்கையானது எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணை அறிக்கைகளை ஒழுங்குப் படுத்தும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஒழுங்குப்படுத்தப்பட்ட 3 விசாரணை அறிக்கைகளானது ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் பாரிய மோசடி தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு இதுவரை 1500 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.